Thursday, November 4, 2010

இந்திய மதவாதியின் குறான் எரிப்பு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூன்று இந்திய மதவாதிகள் சுவிசின் பாராளுமன்றம் முன்பாக குறான் எரித்து போராட்டம் செய்யவுள்ளதாக இன்று பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

றோம் (இத்தாலி) நகரில் Tetus Leo Panakal


ஒரு பிள்ளையும் குறானுடன் தொடர்பில் வருவதை தான் விரும்பவில்லை என்று கடந்த 8 வருடமாக சுவிசில் வசிக்கும் Tetus Leo Panakal  (42) ௬றுகிறார்.

குறானில் இருப்பது பொய் மற்றும் கொடியவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனிதமான குறானை எரிப்பது மக்களிடத்தில் பல பிரச்சனைகளை கொண்டுவரும் என்று மத குருமார்கள் ௬றுகிறார்கள்.

Tetus Leo Panakal  (42)  இந்த போராட்டத்தில் தனது உயிர் போனாலும் அதை பற்றி தான் கவலையடயப்போவதில்லை என்று ௬றுகிறார்.

ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்காவில் இப்படியான ஒரு செயலை பராக் ஒபாமா தலையிட்டு நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையில் வெளிவந்த செய்தி

No comments:

Post a Comment