Thursday, August 19, 2010

அகிம்சையும் இந்தியாவும்

இந்திய ஆளும் வர்க்கத்தின் அட்டூளியங்களை இப்பொழுதெல்லாம் அதிகமான ஊடகங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது.




தங்களை தாங்களே வல்லரசு என்று இன்னும் எத்தனை நாள் தான் சொல்வது. முதலில் உள் நாட்டிற்குள் நல்லரசாக இருப்பது நல்லது. எதிர்வரும் காலங்களில் இது போன்ற புகைப்படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றே நினைக்கின்றேன்.



18.08.2010 அன்று சுவிசில் வெளியாகும் இலவசப்பத்திரிகையான (அதிக மக்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை) இல் இன்றை புகைப்படம் என்ற தலைப்பில் நடுப்பக்கத்தில் வெளியான புகைப்படத்தை இங்கே காண்கின்றீர்கள்.



„ஆளும்வர்க்கத்திற்கு போராடும் இந்த மக்கள் மீது கருணை இல்லை. விவசாயிகளை அகற்றி விட்டு அவ்விடத்தில் வேக வீதி அமைப்பதை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் போராடிய விவசாயிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்“ என்று மேற் குறிப்பிட்ட படத்தினை விளக்கியுள்ளது.

Tuesday, August 17, 2010

கடுப்பேத்துகிறார்கள் மை லாட்

தமிழன் சினிமாவுக்கு கொடுக்கும் முக்தியத்துவத்தை வேற எதுக்குமே குடுக்கிறதில்லை.



ஒரு நடிகை கர்பமா இருந்தால் அது முதல் பக்கச்செய்தி,

படப்பிடிப்பில் நடிகை நடிகைகளுக்கு சுளுக்கு பிடித்தால் அன்று அது தான் தலைப்பு செய்தி,

ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது பரபரப்பு செய்தி,

புதிய படங்கள் வருகிறதென்றால் பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் அது தான் தலையாய செய்தி,

ஒரு கிழட்டு நடிகர் இமயமலையில் போய் படுத்தா அது செய்தி,

ஒரு குண்டு நடிகர் கார் பந்தயத்தில் கடைசியாக வந்தாலும் அது கவர் ஸ்டோரி.

ஒரு *****(நீங்களே விரும்பின சொல்லை போடுங்க) நடிகன்/நடிகை வந்தால் அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கிறதுக்கு மணத்தியால கணக்கில கார் ஓடி, அதுவளை மணத்தியால கணக்கில தேடி, அதுவளோட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்திட்டா நீங்க பிறந்த பலனை அடைஞ்சிட்டீங்களாடா? அவங்கள் உங்களை செருப்பால அடிச்சாலும் அவங்களிட்டதான் போகனும் என்டு ஏண்டா அடம்பிடிக்கிறீயள்????? என்னை கடுப்பேத்துகிறார்கள் மை லாட்! இதில தங்களுக்குள்ள யார் அந்த நடிகை/நடிகன் மாதிரி இருக்கினம் என்டு சண்டை வேற. வாயில வருது நல்லா... பப்ளிக் இடமா இருக்கிறதால தப்பிச்சிங்கடா!