Thursday, October 28, 2010

ஆணியை யார் புடுங்குறது?

ரெம்ப நாட்களாகவே தமிழீழம் நோக்கிய பாதையில ஒரு ஆணி அந்த லட்சியத்தை நோக்கி போறவர்களின் காலில் குத்தி அவர்களின் பயணத்தை தற்காலிகமா நிறுத்தி வைத்துள்ளது. நானும் இந்த ஆணியை யாராவது புடுங்குவார்கள் அல்லது புடுங்க வருவார்கள் என்று பார்த்தால் யாரும் வருவதாக தெரியவில்லை.

என்ன ஆணி? என்ன புடுங்கனும்? ஒரே குழப்பமா இருக்குதில்ல?

இந்த ஆணி வேற யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சுவிஸ் நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா மற்றும் அவரின் மறைமுக அல்லக்கைகள் தான்.

தமிழீழம், மாவீரர்கள், தலைவர் இந்த மூன்று வார்த்தைகளையும் இன்று சுவிசில் வியாபாரமாக்கிய பெருமை கறள்பிடித்த ஆணி அப்துல்லாவையே (அப்துல்லா சார் உங்களுக்கு எங்களால டாக்டர் பட்டம் தான் தர முடியல, இதையாவது ஏற்றுக்கொள்ளுங்க) சேரும்.  

இந்த மூன்று மந்திரச் சொற்களுக்கும் மயங்கி ஏமாந்து போன நூற்றுக்கணக்கான அப்பாவிகளில் ஒருவரின் கதையை பார்ப்போம்.

போர் ஊச்சமடைந்த நேத்தில் கறள்பிடித்த ஆணியும் அவரது அல்லக்கைகளும் நிதி சேர்ப்பில் ஈடுபட்டனர். இவர்கள் குறி வைத்த ஆட்கள் தமிழீழம், மாவீரர்கள், தலைவர் இந்த மூன்று சொல்லுக்கும் மயங்குபவர்கள். இதில் பல (உண்மையான) பணியாளர்களும் அடக்கம். யோசிப்பதற்க்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் விரட்டி விரட்டி பின் தொடர்ந்து சென்று கடன்பத்திரத்தில் கையெளுத்து வாங்கினார்கள்.  பலர் அவர்களில் உள்ள நம்பிக்கையில் கடன்பத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்கவேயில்லை. கடனின் மாதாந்த கணக்கை
கறள்பிடித்த ஆணி தானே கட்டுவதாக உறுதிமொழி அளித்ததே இதற்கு காரணம்.  இந்த அல்லக்கைகளில் முக்கியமானவர்கள் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் (WTCC) மற்றும் வெறும் நன்றியை மட்டும் எதிர்பார்க்கும்  ஒரு தமிழ் பைனான்ஸ் நிறுவனம் (அவர்களுக்கும் வங்கியில் அல்லக்கைகள் உண்டு).  சரி இனி இவர்களின் திருவிளையாடல்களை பார்ப்போம்.

 








இந்தக் கொள்ளையில் சம்மந்தப்பட்ட வங்கிக்கும் தொடர்பு உள்ளதாகவே தம்பி நம்புகிறான். எந்தவொரு வங்கியும் இப்படி விண்ணப்பங்களை கவனிக்காமல் விடாது. ஆனால் தம்பியின் பார்வையில் "வெறும் நன்றியை மட்டும்" எதிர்பார்க்கும் அந்த கடன் மோசடி நிறுவனத்திற்கு சம்மந்தப்பட்ட வங்கியின் வேலைபார்க்கும் ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது. என்ன "நன்றி" சார் எங்களால புடுங்க முடிஞ்சத புடுங்க சொன்னீங்க. முடிங்சதை புடுங்கிறம்.

இதற்கு மேலும் இந்த அகில உலக சுத்துமாத்து தமிழ் நிறுவனத்திடம் நீங்க கடன் வாங்கப்போகும் போது ஒரு நிமிடம் யோசியுங்க. அட நீங்க கடன் வாங்காமல் விட்ட உடனே இந்த "நன்றி கடன்" நிறுவனம் இல்லாமல் போயிடாது. வாழ்க்கை முழுவதும் உட்கார்ந்து சப்பிடுவதற்கான பணத்தை இந்த நிறுவனம் ஏற்கனவே எங்களின் புண்ணியத்தில் சம்பாதித்து முடித்து விட்டது. சார் நான் சொல்றது சரிதானே?


அபதுல்லா சார் நீங்க புதிசா ஒரு ரேஸ்ரோறண்ட் வாங்கியிருக்கிறதா கதை அடிபடுது.மெய்யாலுமா?  அதுக்கும் அடுத்த ஆப்பு தம்பி கைவசம் வச்சிருக்கிறான். 

நீங்க இப்பா பார்ட் ரைமா உங்கட ரெஸ்ரோறண்ட்ல கல்யாண வீடுகளுக்கு சமைத்து குடுத்து சம்பாதிக்கிறதா கேள்விப்பட்டன். அந்தப் பணத்தில மக்களிட்ட வாங்கின கடனை திருப்பிக்கொடுக்கப்போறதா சொல்லித்தான் ஓடர் எல்லாம் எடுக்கிறீங்களாம் (அட பாவிங்களா இன்னுமாடா இவனுவள நம்பிக்கிட்டிருக்கிறீங்க).
தொலைபேசில நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் பழி போட்ட MP3க்கு வெளியீட்டுவிழா வைக்கவா?

உங்கட இந்த மோசடி சாம்ராஜ்ஜியத்திற்கு தம்பி மிக விரைவில் பாடை கட்டுவான் என்பதை அறியத்தருறோம்.

ஜயா உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களே (அப்படி யாராவது இருக்கிறீங்களா?) இதுக்கு நடவடிக்கை இனி என்டாலும் எடுப்பீங்களா? இல்லை இந்தக்கொள்ளையில உங்களுக்கும் பங்கு உள்ளது என்று ஒத்துக்கொள்கிறீங்களா? எது எப்படியோ அந்த சம்மந்தப்பட்ட நபருக்கு நீங்க சம்பளம் கொடுக்கிறதா உங்கட கறள்பிடித்த ஆணி அப்துல்லா படிவத்தில நிரப்பி கொடுத்திட்டார். இது பொலிசுக்கு போன நீங்க பொலிசுக்கும் சேர்த்து பணம் கொடுக்கனும். பண்ணின பாவத்துக்க ஒரு கொஞ்சமாச்சும் நல்லது பண்ணுங்க. இல்லாட்டி தம்பியின்ர கோபத்துக்கு நீங்களும் ஆளாகவேண்டி வரும்.

இப்ப சொல்லுங்க இந்த ஆணியள புடுங்கிறதா வேண்டாமா?